வலைப்பதிவு பட்டியல்

  • Irumbu Kuthirai - *Irumbu Kuthirai* (English: Iron Horse) is an action film written and directed by Yuvaraj Bose and produced by AGS Entertainment. The film stars Atharvaa, ...
    7 ஆண்டுகள் முன்பு
  • 23 Popular Emotional Smiley for Facebook - Previous post we looked at how to publish a blank status message. In this post we would like to share some of the commonly used smiley in Facebook. We incl...
    11 ஆண்டுகள் முன்பு




தபு ஷங்கரின் தேவதைகளின் தேவதை தொடரிலிருந்து
நன்றி - ஆனந்தவிகடன் 


உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு இஷ்ட தெய்வம் யார்?







 
நட்சத்திரங்கள் 
அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்
அஸ்வினி ஸ்ரீ சரஸ்வதி தேவி 
பரணி 
ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
கார்த்திகை 
ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
ரோகிணி 
ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
மிருகசீரிடம்
ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
திருவாதிரை    ஸ்ரீ சிவபெருமான் 
புனர்பூசம் ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) 
பூசம் 
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) 
மகம்
ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம் ஸ்ரீ ஆண்டாள் தேவி 
உத்திரம்
ஸ்ரீ மகாலக்மி தேவி
ஹஸ்தம்
ஸ்ரீ காயத்திரி தேவி 
சித்திரை
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் 
சுவாதி
ஸ்ரீ நரசிம்மமூர்த்தி 
விசாகம் ஸ்ரீ முருகப் பெருமான்
அனுசம் 
ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர் 
கேட்டை
ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம்
ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம்
ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) 
உத்திராடம்
ஸ்ரீ வினாயகப் பெருமான் 
திருவோணம்
ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
அவிட்டம்
ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்)
சதயம் 
ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) 
பூரட்டாதி  
ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்) 
உத்திரட்டாதி  
ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி
ஸ்ரீ அரங்கநாதன்

மேலும் சில பதிவுகள் 

போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார். இவரது வாழ்க்கையைப் பற்றி குறைவான சமகாலத்திய தகவல்களே கிடைக்கின்றன. பிற்காலத்திய குறிப்புகளும் கதைகளுடன் கலந்து தெளிவற்ற நிலை உள்ளன. தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ இளவரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. அவர் பாரசீகத்தைச் சேர்ந்தவர் என்று கூறும் வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன. புத்த மத குருவாக மாறிய பிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மர் அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது. சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார். 


தமிழில் ஏழாம் அறிவு என்னும் திரைப்படத்தில் சூர்யா போதிதருமனாக இருந்தது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





உன்னை இழந்ததற்கு பதிலாய் உயிரை இழந்திருக்கலாம்


நீயும் நானும்
நடந்து சென்ற பாதை
நீண்டு கொண்டேயிருக்கிறது
முடிவில்லாமல்....



நம் கடவுச்சொல்லானது சரியாக இல்லாமல் இருந்தாலோ, அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தாலோ நம் நிலை மிக மோசமாக மாறிவிடும்.
அதனால் தான் கணணி பாதுகாப்பு குறித்து பேசுபவர்களெல்லாம் வலிமையான கடவுச்சொல்லை அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள். எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கடவுச்சொல்லை அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம்.
  •  கடவுச்சொல்லில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.
  •  கடவுச்சொற்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம்.
  •  கடவுச்சொற்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கணணி பயன்பாட்டில் மின்னஞ்சல் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கணணிகளில் வேலை எனப் பலவித இடங்களில் கடவுச்சொல் பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றி பயன்படுத்துவது மிகச் சிறந்த ஒன்று.


வெறுமையாய் உருகும்
எனது வைகறைக் கனவுகளெல்லாம்
நீ வந்து உறையத்தான்.
விருப்பமின்றி தொடரும்

பலமில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள சமூகத்தளமாக பேஸ்புக் மேலும் பல பயனர்களை கவரும் நோக்கில் அன்றாடம் புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகின்றது.



கணணியில் உங்களது தகவல்களை ரகசியமாக வைப்பதற்கு கடவுச்சொல்லை (Password)  பயன்படுத்துவீர்கள். இவ்வாறு போல்டேர்களுக்கு (Folder) கடவுச்சொல்லை இட்டு வைப்பதற்கு WinMend Folder Hidden என்ற மென்பொருள் உதவுகிறது. இதன் பின்னர் நீங்கள் விரும்பும் நேரத்தில் அவற்றை பயன்படுத்தவும் உதவுகின்றது. இந்த மென்பொருள் மூலம் மறைத்து வைத்த போல்டேர்களை  வேறு எந்த மென்பொருளாலும் திறக்கவே முடியாது.



வரதட்சிணை
எல்லாம் கேட்டு
உன்னைக்
கொடுமைப்படுத்திவிட
மாட்டேன்.
ஆனால்
அதைவிடக்
கொடுமையாய் இருக்கும்
என் காதல்.


**


கூந்தலில் பூவாசனை வீசும்;
தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல்
வாசனையல்லவா வீசுகிறது!


**


நீ கிடைக்கலாம்
கிடைக்காமல் போகலாம்
ஆனால்
உன்னால் கிடைக்கும்
எதுவும்
எனக்கு சம்மதம்தான்..


**


எனது உறக்கத்தின்
வாசலில்
நான் காவல்
வைத்திருக்கிறேன்.
உனது கனவுகளை
மட்டும் அனுமதிக்க..


**


நீ
வெயில் காரணமாக
உன் முகத்தை
மூடி கொண்டாய்..
உன் முகத்தை
பார்க்காத கோபத்தில்
சூரியன்
எங்களை சுட்டெரிகிறது!!


**


நீ
சாய்வதற்கென்றே
வைத்திருக்கும்
என் தோள்களில்
யார்யாரோ
தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்


**


உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்……


**


உன்
பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற
ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.


"கடிகாரம் ஓடலியா?"
என யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்..


அது
காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்


**


மரத்தின்
கீழ்
உனக்காக
காத்திருக்கையில்
மரமேறிப் பார்க்கும்
மனசு


**


எனக்கு
லீப் வருடங்கள்
ரொம்ப பிடிக்கும்
அந்த வருடத்தில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாய் வாழலாம்
உன்னுடன்!


**





னது உறக்கத்தின்
வாசலில்
நான் காவல்
வைத்திருக்கிறேன்.
உனது கனவுகளை
மட்டும் அனுமதிக்க..

**

நீ
வெயில் காரணமாக
உன் முகத்தை
மூடி கொண்டாய்..
உன் முகத்தை
பார்க்காத கோபத்தில்
சூரியன்
எங்களை சுட்டெரிகிறது!!

**

நீ
சாய்வதற்கென்றே
வைத்திருக்கும்
என் தோள்களில்
யார்யாரோ
தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்

**

ன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்……

**

ன்
பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற
ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.

"கடிகாரம் ஓடலியா?"
என யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்..

அது
காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்

**

ரத்தின்
கீழ்
உனக்காக
காத்திருக்கையில்
மரமேறிப் பார்க்கும்
மனசு

**

னக்கு
லீப் வருடங்கள்
ரொம்ப பிடிக்கும்
அந்த வருடத்தில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாய் வாழலாம்
உன்னுடன்!

**

ன் பாட்டியின்
நினைவுநாளில்
நீ ஒரு சின்ன இலையில்
சாதத்தை வைத்துக்கொண்டு
‘ கா கா ‘
என கத்துவதைப்பார்த்ததும்
‘"அட...
குயில் கா கா ன்னு கூவுதே “
என்றேன்.
நீ இலையை கிணற்று
மேல் போட்டுவிட்டு
மானைப்போல் ஓடி மறைந்தாய்.

**

சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்..
அந்த சீப்போ
உன் கூந்தலில்
ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.

**

சொல்லாமல் வந்த
புயல்மழை நாளில்
நீயும் உனது தந்தையும்
வருகையில் குடைக்கம்பி
உன் தலையில்
குத்திவிட்டதற்காக
உன் தந்தையைப்பார்த்து

கெஞ்சலாய் நீ
சுழித்த முகச்சுழிப்பில்
இன்னொரு
புயல் உருவாகி
மழையால்
அடித்துவிட்டு போனது
என்னை மட்டும் .!

**
ல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக்கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம்
உன்னை ரசித்துகொண்டிருந்தன !

**

ரே ஒரு முறைதான்
என்றியும்
உன் நிழல்
என் மீது பட்டதால்
நான்
ஒளியூட்டபட்டு
கவிஞனானேன்!

**

ழகான பொருட்கள்
எல்லாம் உன்னை
நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவு படுத்தும்
பொருட்கள்
எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன..

**

நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான்
இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும்
போதுதான்
தலைப்புடன் கூடிய
கவிதையாகிறாய்.

**

ன் கையசைவிற்காகவே
எத்தனைமுறை
வேண்டுமானாலும்
உன்னிடமிருந்து விடை பெறலாம்!

**

நீ தூங்குகிறாய்...
எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை
மூடியிருக்கும்
இமைகளில் கூட
எனக்காக விழித்திருக்கிறது
உன் அழகிய காதல்.

**

ன்னை
காத்திருக்க வைக்கவாவது
நீ
என் காதலியாக வேண்டும்..
கடைசிவரை
வராமல் போனால்கூட
ஒன்றுமில்லை.

**

காதலிக்கும்போது
கவிதைதான்
கிடைக்கிறது.
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது.

**

நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவள்.
நடக்கையில் சிக்கிக்கொள்ளும் உன்
உடையுடன் சேர்ந்து என் மனமும் சிக்கிக்
கொள்கையில், நீயோ என்னை விட்டுவிட்டு
உன் உடையை மட்டும் இழுத்துவிட்டுக்
கொண்டு போகிறாய்!

**

ன்னைக் காத்திருக்க வைக்கவாவது நீ என்
காதலியாக வேண்டும். கடைசிவரை வராமல்
போனால் கூட ஒன்றுமில்லை!


படித்ததில் பிடித்தது



நீங்கள் பயன்படுத்தும் கணணியினை தீம்களை(Theme) பயன்படுத்தி விதவிதமான தோற்றத்தில் வடிவமைக்கலாம் என்பது யாவரும் அறிந்தவிடயம். இருந்தும் விண்டோஸ் 7 உடன் வரும் தீம்கள் குறிப்பிட்ட அளவே காணப்படுகின்றன. இதனால் அந்த தீம்களை அடிக்கடி மாற்றி உங்களுக்கு சலித்திருக்கும். உங்கள் சலிப்பை போக்குவதற்காக Microsoft நிறுவனம் புதிய பல தீம்களை இலவசமாக தரவிறக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

பூகோவா:

கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதிக எடை போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும். 

இவை எல்லாம் எதன் குணம்? பூகோவாவின் குணங்கள். வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சேலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை பூகோவாவில் செய்யக் கூடிய உணவு வகைகள்.பூகோவாவில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம். பூகோவா உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம்.

வாழைக்காய்:

வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தை தான் சமைப்பது வழக்கம். அதற்காக மற்ற வகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது கிடையாது. அவைகள் பரவலாக கிடைப்பதில்லை.



மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும். இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும்.

வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். பொதுவாக கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது.

இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும். வாழைக்காய் சாப்பிடு வதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும். ஆனால் வாய்வு மிகும். அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும்.

பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.

பப்பாளி:
ஆப்பிளைவிட சிறந்த பழம் பப்பாளி. இதில் ஆப்பிளில் உள்ளதைவிட அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. விலையும் மிகமலிவு. இதனால் இதை ஏழைகளின் ஆப்பிள் என்றே அழைக்கலாம்.

பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில் தான் உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. ஆப்பிளைக் காட்டிலும் இனிப்பான பழம் பப்பாளி. பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியமாக வாழலாம்.


பப்பாளியை நாம் எந்தக் காலத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இது ஒரு திகட்டாத பழம் என்பதால், நாம் அளவுக்கதிகமாக சாப்பிட்டு விடுவோம். அப்பொழுதுதான் பிரச்னை. அளவோடு சாப்பிடும் வரை இது அபூர்வமான பழம்.

முகெலும்பு பிதுக்கம் அல்ல நழுவல் காரணமாக வரும் கடுமயான வலிக்கு பப்பாளியில் உள்ள 'கமோ பாப்பன்' என்ற கெமிக்கல் நல்ல குணமளிப்பதாக அமெரிக்காவில் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.

பொவாகவே பப்பாளி தலைமுடி, சருமம், கண்பார்வை, தொண்டை, வயிறு, சிறுநீரகம் அனைத்துக்கும் மிகவும் ஏற்றது. எக்காரணத்தைக் கொண்டும் பப்பாளியை நாம் தவிர்த்தால், நம் ஆரோக்கியத்தை நாம் தவிர்க்கிறோம் என்றுதான் அர்த்தம்.''




யோகம் என்ற சொல் வெவ்வேறு விதமான பொருளில் உபயோகப்படுத்தப் படுகிறது. பொதுவாக கர்ம யோகம், ஞான யோகம், பக்தியோகம் என்பவை கீதை முதலாக பல்வேறு சாத்திரங்களில் மிக விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன. இது தவிர ஹட யோகம், ராஜ யோகம் என்று இன்னும் எத்தனை எத்தனையோ பதங்களில் யோகம் என்ற சொல் வருகிறதே அன்றி அது என்ன பொருளை அல்லது என்ன

இந்திய  தானியங்கள் காய்கறிகளுக்கு என்ன ஆங்கில பெயர் என்று அறிய வேண்டுமா? முக்கியமாக வெளிநாடுகளில் இருப்போர் கடைகளுக்கு செல்லும்போது பயன்படக்கூடிய ஒரு அட்டவணை. 



EnglishTamil
Pulses and Cereals
Bengal Gramகடலைப் பருப்பு
Green Gramபயறு, பயத்தம் பருப்பு 
Red Gramதுவரம் பருப்பு 
Black Gram or Urid dhalஉளுத்தம் பருப்பு, உளுந்து
Gram Flourகடலைமாவு
Corn Flourசோளம் மா 
Vegetables and Fruits
Brinjalகத்திரிக்காய் 
Capsicumகுட  மிளகாய் 
Cabbageகோவா
Cauliflowerபூக்கோவா
Carrotகாரட் 
Coriander leavesகொத்தமல்லி  இலை 
Coconutதேங்காய் 
Mint Leavesபுதினா  இலை 
Green Peasபட்டாணி 
Lemonஎலுமிச்சம் பழம்
Onionவெங்காயம் 
Garlicவெள்ளை  பூண்டு , உள்ளி 
Potatoஉருளைக்கிழங்கு
Tomatoதக்காளி 
Bananaவாழைபழம் 
Pineappleஅன்னாசி  பழம் 
Mangoமாம்பழம் 
Grapesதிராட்சை 
Nuts and Condiments
Aniseedசோம்பு 
Asafoetidaபெருங்காயம் 
Bay Leafபுன்னை  இலை 
Black Pepperமிளகு 
Cardamomஏலக்காய் 
Cinnamonகராம்பு 
Clovesலவங்கம் /கிராம்பு 
Coriander Seedsகொதமல்லி 
Cumin Seedsசின்ன சீரகம் 
Curry leavesகறிவேப்பிலை 
Cashewnutsமுந்திரி , கஜூ 
Fennelபெருஞ்சீரகம் 
Fenugreekவெந்தயம் 
Garlicவெள்ளை  பூண்டு 
Gingerஇஞ்சி 
Jaggeryவெல்லம்
Mustardகடுகு 
Poppy Seedsகசகச 
Red Chilliesசிகப்பு  மிளகாய் 
Raisinsமுந்திரிகை வத்தல் 
Tamarindபுளி
Turmeric powderமஞ்சள் 
Miscellaneous
Yogurtதயிர் 
Rice (Raw)பச்சை அரிசி 
Rice (Boiled)புழுங்கல் அரிசி 
Semolinaரவை 
Vermicelliசேமியா 

Treat your password like your toothbrush. Don’t let anybody else use it, and get a new one every six months” – Clifford Stoll


ன்றைய அவசர யுகத்தில் எதுக்குமே யோசிக்க நேரம் இருப்பதில்லை. கம்ப்யூட்டர், ஆன்லைன் பரிவர்த்தனைகள் என அனைத்துக்கும் பாஸ்வேர்டு இருக்கிறது. இந்த பாஸ்வேர்டுகள் பெரும்பாலும் பெயர், காதலியின் பெயர், திருமணம் ஆகிவிட்டால் மனைவி, குழந்தைகள் பெயர், பிறந்த தேதி அல்லது கம்ப்யூட்டர் கீ-போர்டில் இருக்கும் வரிசையான எண்கள், மானிட்டரில் இருக்கும் எழுத்துக்கள் என பெரும்பாலான நபர்களின் பாஸ்வேர்டுகளாக இருக்கின்றன.


முதுமையை மகிழ்ச்சியாகக் கழிக்க ஓய்வூதியம், பாலிசி, சேமிப்பு என்று பல்வேறு பாதுகாப்பு வழிகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். ஆனால், உடல் உபாதைகளில் விடாது துரத்தும் முதுகுவலி, மூட்டு வலிகளைக் குறைக்க, மருந்து-மாத்திரை, ஊசி, அறுவை சிகிச்சை என்று நம் உடம்பை மேலும் புண்ணாக்கிக் கொண்டே இருக்கிறோம்!

 'முதுமை வந்தாலே முதுகு வலியும் வந்துவிடும்’ என்பார்கள். ஆனால், இதில் உண்மையில்லை! கை, கால், மூட்டு எலும்புகளில் தேய்வு என்பது எல்லோருக்கும் பொது. தொழில், வாழ்க்கைமுறை, உணவுப் பழக்கங்களைப் பொறுத்து சிலருக்கு மூட்டு வலியானது இளமையிலேயேகூட வரலாம்.


'வாயு இலாது வாதம் வராது’ என்கிறது சித்த மருத்துவம். வாத நோய்களில் ஒருவகைதான் மூட்டுவலி. வயிறு உப்புசம், வாய்வுக் கோளாறு, செரிமானமின்மை, வயிற்றுப் புண்.... போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு வாதம் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். வாயுப் பதார்த்தங்களை விலக்கி வைத்தாலே போதும்; நோயும் இல்லை, மருத்துவச் செலவும் இல்லை.

அதிக உடல் எடை கொண்டவர்கள், அதிக அளவு மாவு- கொழுப்புச் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுபவர்கள், வேலை நிமித்தம் நாள் முழுவதும் நின்று கொண்டே இருப்பவர்கள், நெடுந்தூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கும் எலும்புத் தேய்மானம் அதிகமாக இருக்கும். இதனால், விரைவிலேயே மூட்டு மற்றும் முதுகு வலி வந்துவிடுகிறது. ஒரே இடத்தில் அதிக நேரம் நிற்கும்போது, இடுப்பு, மூட்டுப் பகுதிகளில் வலி அல்லது தீ பட்டது போன்ற எரிச்சல் உணர்வு ஏற்பட்டால் எலும்புத் தேய்மானம் ஆரம்பித்துவிட்டது என்று அறிந்து கொள்ளலாம்.

தினமும் அதிக நேரம் டூ வீலரில் பயணம் செய்பவர்களுக்கு இடுப்புப் பகுதிகளில் அதிர்வு அதிகமாக இருக்கும். இந்த அதிர்வானது முதுகெலும்புகளை வலுவாகப் பிணைத்திருக்கும் தசை நாண்களின் பிடிப்பைத் தளரச் செய்துவிடும். கழுத்து மற்றும் முதுகெலும்புகளைக் கட்டக்கூடிய தசைகளை வலுவாக்கும் உடற்பயிற்சி, யோகாசனங்களைச் செய்தால் இந்த வலி வராமல் காத்துக் கொள்ளலாம். முதுகுவலியை புறமுதுகிட்டு ஓடச் செய்ய சமதளமான தரையில் படுத்துக்கொண்டு, கால் மூட்டுகளை மடக்காமல், இருபத்தைந்து டிகிரி கோணத்தில், மெதுவாக மேலே தூக்கிய நிலையில் நிறுத்திக் கொள்ளவும். இப்படி மேல் நோக்கி நிறுத்தும்போது, கால்களின் முழு எடையையும் இடுப்புத் தசைகள் இழுத்துப் பிடித்துக் கொண்டு, கால்கள் நடுங்கத் தொடங்கும். தினமும் இந்த பயிற்சியைச் செய்யும்போது, இடுப்புத் தசைகள் பலமாகும். இதற்கு 'லம்பா எக்ஸர்சைஸ்’ என்று பெயர்.

இதுதவிர தினமும் சலபாசனம், நவாசனம், தனுராசனம், பவன்முக்தாசனம் போன்ற ஆசனங்களைச் செய்யும்போது, எலும்பு மூட்டுகள் நன்கு வலுவடையும். எந்தவித வலியும் வராமல் தற்காத்துக் கொள்ளலாம். கால் மூட்டுகளை வலுவாக்க, கால்களை நீட்டிய நிலையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். மூட்டுகளின் கீழ் ஒரு தலையணையை வைத்து மூட்டுகளால், தரையோடு அழுத்த வேண்டும். இப்படி அழுத்தும்பொழுது கால் மூட்டின் தசைநாண்களும், தொடைப்பகுதி தசைகளும் வலுவடையும். தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த பயிற்சியைச் செய்தாலே, நம்ப முடியாத அளவிற்கு மூட்டுவலி குறைந்துவிடும்.

உணவுக்கும் மூட்டு வலிக்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளது. நாம் சாப்பிடும் சில உணவு வகைகள் வாயுவை அதிகப்படுத்தி வாதத்தை உண்டு பண்ணும். இதனால், கை, கால்களில் பயங்கர வலி ஏற்படும். புளி, துவர்ப்புச் சத்துக்கள் உடம்பில் அதிகமாகச் சேர்ந்தால் வாதம் வரும். அன்றாட உணவில், நாம் துவர்ப்புச் சத்தை சேர்ப்பதென்பது மிகவும் குறைவுதான். ஆனால், எல்லா குழம்பு வகை களிலும் கட்டாயம் புளி சேர்க்கப்படுகிறது.

நாற்பது வயதைக் கடந்தவர்கள், கட்டாயம் உணவில் புளியின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். இதுதவிர, அதிக அளவில் வாயுவை உண்டு பண்ணும் வாழைக்காய், கொண்டைக் கடலை, மொச்சைப் பயறு, பட்டாணி மற்றும் கிழங்கு வகைகளை கூடுமான வரையில் தவிர்த்துவிடுவது நல்லது. வாதத்தை அதிகப்படுத்துவதில், குளிர்ச்சிக்கு பெரும் பங்கு உண்டு. குளிர் பானங்கள் குடிப்பதை விட்டொழியுங்கள். இவற்றையெல்லாம் கடைப்பிடித்தாலே 'வலியும் இல்லை; வீணான மருத்துவச் செலவும் இல்லை!'' 

நன்றி விகடன்

மூட்டு வலிக்கு ஏற்ற  உடற்பயிற்சிகளை  அறிய 

யோகாசனம்

மேஷம் 

நீங்கள், மேஷ லக்னத்தில் பிறந்தவர். இராசி மண்டலத்தின் முதலாவது ராசி மேஷம்.
அது, தீயைப்போல உக்ரமானது. உங்கuக்கு அஜீரணம், எச்சில், தேமல் மற்றும் வேறு சரும நோய்கள் இருக்கக்கூடும். காதல் விவகாரங்களில் நீங்கள் கொஞ்சம்கூட, ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக இருக்கக் கூடியவர். நீங்கள், நல்ல சுபாவமும், வலிமையும் படைத்தவர். நீங்கள் பிறருடன் சண்டைபிடிப்பவர் நாசூக்கு அற்றவர் அவசரப்படக் கூடியவர் கோபக்காரர் செவ்வாயினால் ஆளப்படுபவர். நீங்கள் மகிழ்ச்சியுடனிருந்தாலும் மன உணர்ச்சிவெறி கொண்டவரல்ல காமவெறி உடையவரல்ல. நீங்கள் கூரிய புத்தியுடைய அறிவாளி நல்ல பெயர் சேர்க்கக்கூடியவர். அடர்த்தியான புருவங்களைக் கொண்ட நீங்கள், தைர்யம் மிக்கவர். உள்ளத்து உணர்ச்சிகளின் திடீர் உந்தலில் செயல்படுபவர். உங்களுக்கு உயரிய விவேகமும், அறிவும், துணிவும், நம்பிக்கையும் உள்ளன. நீங்கள் எப்போதுமே மற்றவர்களை அதிகாரம் செய்யக்கூடிய உயரிய லட்சியத்தைக் கொண்டவர். நீங்கள், மற்றவர்களுக்கு ஆணையிட்டு, நிர்வகித்திடும் பணிக்குச் சாலப் பொறுத்தமானவர். உங்களுக்கு, தசைப்பற்றுடைய உடல்வாக்கு இருக்கிறது. நீங்கள் விரைவாக செயல்படக்கூடியவர். நீங்கள் கர்வமானவர் சுயகௌரவத்துக்கு, மிகுந்த முக்யத்துவம் தருபவர். மற்றவர்களின் திறமையை, நீங்கள் குறைத்து மதிப்பிடுபவர் இது உக்ரமான ராசியாதலால், நீங்கள் எப்போதுமே, புதிய கருத்துக்களையும் யோசனைகளையும் மனதில் கொண்டவர். இதற்கு செவ்வாயின் ஆதிபத்தியம் இருப்பதால், நீங்கள் சிறிய காயங்கள் மற்றும் பெறும் விபத்துக்கள் ஏற்படாமல் எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

ரிஷிபம்

நீங்கள் ரிஷப லக்னத்தில் பிறந்தவர். ரிஷபம், நிலம் சார்ந்த நிலையானஇரண்டாவது ராசியாகும். இதற்கு அதிபதி சுக்ரன் எனவே உங்களுக்கு நல்ல சிவந்த மேனியும், பெரிய முக்கு மற்றும் வாயும், அகலமான தோள்களும், கரிய கண்களும், தலைமுடியும் இருக்கும். உங்களுக்கு சுருட்டை முடி இருக்கலாம். நீங்கள் கோபக்காரராக இருப்பீர்கள். நீங்கள் தீய குணமுடையவர். வாழ்க்கையில், சுகபோகங்களை அடைவதற்கு நீங்கள் விருப்பம் கொண்டவர். நீங்கள் மதுபானத்தில் மிகுந்த விருப்பமுடையவர். உங்கள் எதிர்பாலைச் சேர்ந்தவர்களின் நட்பை நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்களாகவே ரசித்து, அனுபவித்து இன்பம் காணக்கூடியவர். மிகவும் மோசமான சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் நீங்கள் மிகவும் பொறுமையாக இருப்பவர். ஒளிவு மறைவின்றி, எதிலும் மனம்விட்டு வெளிப்படையாக இருக்கக்கூடியவர். நீங்கள் நேர்மையான சுபாவம் கொண்டவராதலால், மற்றவர்கள் உங்கள் கருத்துக்களை சார்ந்திருக்கிறார்கள். நீங்கள் ராஜ தந்திரம் படைத்தவர் உங்கள் மனதைப் புரிந்து கொள்வது, அவ்வளவு எளிதல்ல. நீங்கள் தோட்டங்கள், மனைகள் போன்ற எஸ்டேட் வசதிகளையும் அனுபவிப்பீர்கள். கலையில் ஆர்வம் கொண்ட நீங்கள், கலைசார்ந்த முயற்சிகளில் மிகப் பிரமாத வெற்றி காண்பீர்கள். உங்களுக்கு மென்மையான சருமம் இருக்கும். அழகையும் டாம்பீகமான சொகுசையும், மிகவும் விரும்பும் நீங்கள், உங்கள் இல்லத்தில் ஆசை கொண்டவர். உங்கள் குழந்தைகளிடம் மிகுந்த அன்பும், ஈடுபாடும் கொண்டவர். உங்கள் மனைவி/கணவர் - உயரிய அந்தஸ்தில் இருக்கக்கூடும். நீங்கள் பதட்டப்படாமல், மென்மையாக பேசக்கூடியவர் ஓரளவிற்கு, உங்கள் சுபாவத்தில், பெண்மை குடிகொண்டிருக்கும். இளகிய, கருணை நெஞ்சம் படைத்த நீங்கள், நல்ல மனிதர்களுடன் சம்பந்தப்பட்டவர். உங்களுக்கு நீண்ட பற்கள் இருக்கும். சமுதாயத்தில் நீங்கள் நல்ல பெயரும் புகழும் பெறுவீர்கள். ஆழ்ந்த உள்ளத்து உணர்ச்சிகளைக் கொண்ட நீங்கள் அமைதியை விரும்புகிறவர். சமுக மற்றும் குடும்ப ரீதியிலான கடமைப் பொறுப்புக்களை, நீங்கள் எப்போதும் நிறைவேற்றி வைத்திட முயலுகிறீர்கள். காதல் விவகாரங்களில், நீங்கள் எப்போதுமே, விசுவாசத்துடன் இருக்க முயற்சி செய்கிறீர்கள். குடும்ப ரீதியில் நல்ல மகிழ்ச்சியை அனுபவிக்கும் நீங்கள், எப்போதுமே குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தில் மிக்க ஆர்வம் கொண்டவர். நல்ல உடுப்புக்களை விரும்பும் நீங்கள் வாழ்க்கையில், பல சுகபோகங்களையும் ரசித்து அனுபவிக்கக் கூடியவர். 36 வயதில், உங்களுக்கு சில தொல்லைகளும் பிரச்னைகளும் ஏற்படலாம்

மிதுனம்

நீங்கள் மிதுன லக்னத்தில் பிறந்தவர். மிதுனம், ஒரு பொதுவான ராசி.
ராசி மண்டலத்தில், அது முன்றாவது ராசி எனவே, கோதுமை நிறத்தையத்த மாநிறமாக நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் எப்போதும் சிரித்துப் பேசி சந்தோஷமாக இருக்கும் ஒரு பிறவி. கலைகளிலும் பாடல்களிலும் உங்களுக்கு கொள்ளை ஆசை. உடல் இன்பங்கள் (சிற்றின்பங்கள்) காண்பதில் நீங்கள் மிகுந்த விருப்பம் கொண்டவர். நீங்கள் நல்ல காம உணர்ச்சி கொண்டவர். நல்ல கம்பீரமான, எடுப்பான தோற்றமுடையவராக நீங்கள் இருப்பீர்கள். சூது நிறைந்தவர் மற்றவர்களுக்கு உதவக்கூடிய நீங்கள், கவிதையுள்ளம் கொண்டவர். பல சமயத் தலங்களுக்கும் பயணம் செல்லும் நீங்கள், விஞ்ஞான ரீதியில் எதையும் அணூகும் மனப்போக்குடையவர். வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில், உங்களுக்கு சில பிரச்சனைகள் அல்லது தொல்லைகள் இருக்கலாம் ஆனால் உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் நல்ல மகிழ்ச்சி கிடைக்கும். 32, 35 ஆம் வயதிலிருந்து, நீங்கள் அதிருஷ்டவசமான ஒரு காலகட்டத்தில் பிரவேசிப்பீர்கள். பல வசதிகளையும் சுகபோகங்களையும் அனுபவிப்பீர்கள். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பானவர். பல புத்தகங்களையும் படிப்பதில் விருப்பம் கொண்ட நீங்கள், புகழை எட்டிவிடத் துடிப்பீர்கள் ஓயாமல் ஏங்குவீர்கள். உங்கள் நீண்ட உடல் உறுப்புக்கள் இருக்கும். நீங்கள், நல்ல உணவை, மிகவும் விரும்புகிறவர். அரசு மற்றும் சமுதாயத்திடமிருந்து, உங்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் புகழும் கிடைக்கும். கலைகள் மற்றும் விஞ்ஞான அறிவை, நீங்கள் பெற்று விளங்குவீர்கள். ஜலதோஷம், இன்?ப்ளூயன்சா காய்ச்சல், மார்ச்சளி போன்ற நோய்கள் பீடிக்காமல், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். முலநோய், காய்ச்சல், போன்றவற்றால் நீங்கள் பாதிக்கப்படலாம். உங்கள் வாழ்க்கையில், பெருமளவிலான மாற்றங்களை நீங்கள் உணருவீர்கள் அனுபவிப்பீர்கள் உங்களுக்குக் குடும்பத் தொல்லைகள் இருக்கலாம். சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் படைத்த நீங்கள், எதையும் கற்பதில் விருப்பம் கொண்டவர். ஒரே சமயத்தில் பலதரப்பட்ட வேலைகளையும் நீங்கள் மேற்க்கொண்டு விடுவதுதான், உங்களிடம் காணூம் குறைபாடு. நீங்கள் நன்கு உறங்கினால், நல்ல உடல் ஆரோக்கியத்தை, உங்களால் பராமரித்திட முடியும். எதிலுமே குறுக்கு வழி - அதிலும் சுறுக்கு வழியை, நீங்கள் விரும்புவதுதான், உங்களின் ஒரு விநோதமான மனப்போக்கு நீங்கள் மிகவும் திறமை வாய்ந்தவர் பல்வேறு வழிகளையும் கடைபிடிப்பதன் முலம், நீங்கள், உங்கள் திட்டங்களை மிகவும் விரைவாக நிறைவேற்ற முடிகிறது. உங்களுக்கு நல்ல, சிறப்பான உடல்வாகும் உறுதியான மனநிலையும் இருக்கும்

கடகம்

நீங்கள் கடக லக்னத்தில் பிறந்தவர் ராசி மண்டலத்தில் நீர் சார்ந்த - நான்காவது ராசிநீங்கள், ராஜ தந்திரத்துடன், தளுக்காக செயல்படக்கூடியவர் உங்களுக்கு உடல் அமைப்பின் மேல்பகுதி, பெரியதாக இருக்கும். நீங்கள், உங்கள் எதிர்பாலைச் சேர்ந்தவர்களை விரும்புபவர் செல்வ வளத்தை நீங்கள் அனுபவிப்பவர். நீங்கள் தண்ணீரில் விருப்பங்கொண்டவர். உங்கள் நண்பர்களின் எதிர்ப்பு, உங்களுக்கு இருந்து வரும். மிதமான ஒரு உடல்வாகுடைய நீங்கள், சாம்பல் நிறத்தவராய், பழுப்பு நிற முகமும், லேசான மற்றும் பழுப்பு நிற முடியும் கொண்டவராக இருப்பவர். நீங்கள் சற்று பலவீனமான உடல் அமைப்புடன் இருப்பீர்கள். கண்களின் நிறம், வழக்கத்துக்கு சற்று மாறுபட்டதாய் இருக்கும். சில நேரங்களில், நீங்கள், கோழையாகவும், பயந்தாங்கொள்ளியாகவும், மந்தமாகவும், கவனமற்றும் இருப்பவர். வாழ்க்கையில், சந்தோஷத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். நீங்கள் செல்வ வளத்தையும் சுகபோகங்களையும் அனுபவிப்பீர்கள். நீங்கள், மிகவும் மனோபாவமானவர். மிகுந்த புத்திசாலி விவேகி கலையிலும் இசையிலும் மிகவும் விருப்பம் கொண்டவர். மற்றவர்களின் சுபாவத்தை விரைவாகப் புரிந்துகொண்டு, அவர்களின் கருத்துக்களை ஈர்த்துக் கொள்ளும் சக்தி, உங்களிடம் இருக்கிறது. உணர்ச்சி மனோபாவம் அதிகமாக இருப்பதால், நீங்கள் நரம்புத் தளர்ச்சிக்கு உட்படக்கூடும். சில சந்தர்ப்பங்களில், நீங்கள் தைர்யம் மிக்கவர் துணிச்சலானவர் நீங்கள், மாறக்கூடிய மனநிலை உடையவர் நல்ல கற்பனை வளம் படைத்த நீங்கள், எப்போதும் அலைந்து திரியும், நிம்மதியற்ற வாழ்க்கை நடத்துகிறீர்கள். உங்கள் விருந்தோம்பலுக்கு, நீங்கள் நன்கு பெயர் பெற்றவர். ஆழ்ந்த உணர்ச்சிகளைக் கொண்ட நீங்கள், விசுவாசமான, கடமைப் பொறுப்புணர்ச்சியுடைய ஒரு மனிதர். ஒரு திட்டத்தை வகுத்து, அதனை நீங்கள், மிகுந்த மன உறுதியுடன் நிறைவேற்றி, வெற்றி காண்கிறீர்கள். பல இடங்களிலிருந்தும் உங்களுக்கு பணவசதி கிடைக்கும். நீங்கள் சுயநலவாதி தாராள சிந்தை கொண்டவர். உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் நீங்கள், பலவீனமான உடல் நிலையைக் கொண்டிருந்தாலும் வயதாக வயதாக, நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள். நீங்கள் மிகப் பெருமளவில் உணர்ச்சி பாதிப்புக்கு உட்பட்டவர் உங்கள் சொந்த நலன்பற்றியே, நினைப்பவர் மாற்றத்தை விரும்புபவர் மார்பு மற்றும் வயிற்றுக் கோளாறுகளால் நீங்கள் பாதிக்கப்படலாம்.

சிம்மம்

நீங்கள் சிம்ம லக்னத்தில் பிறந்தவர் உக்ரமான 5 - வது ராசி சிம்மம்உங்களுக்கு கவர்ச்சிமிக்க எடுப்பான தோற்றம் ஒன்று இருக்கும். உங்களுக்கு லேசான கேசமும், பெரிய மற்றும் உருண்டையான முகமும் கொண்ட, உங்கள் சருமத்தின் நிறம், சிவந்ததாய் இருக்கும். நீங்கள், விளையாட்டுப் போட்டிகளில், மிகுந்த நன்னம்பிக்கையுடன் விறுவிறுப்பாக போட்டியிடக் கூடியவர் நீங்கள், பிறரிடம் மரியாதைகாட்டி பணிவுடனும், லட்சியப் பேரவா கொண்டவராகவும் இருப்பவர். நீங்கள் முன்கோபியாக இருப்பீர்கள் தாயாரிடமிருந்து வெகு தொலைவில், வசிப்பீர்கள்.உங்களில் பெரும்பாலானவர்களுக்கும் மிகவும் பிரதானமான, எடுப்பாக முன்தலை இருக்கும். உங்களுக்கு மிகவும் எடுப்பான, கம்பீரமான மற்றும் ராஜ தோற்றம் இருக்கும். உங்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான நண்பர்களும் உறவினர்களும் இருப்பார்கள் நீங்கள் ஒரு தொழில் திட்டத்துக்குத் தலைவராக இருந்து, மற்றவர்களுக்கு ஆணையிடக் கூடியவர். நீங்கள், எதிலும் ஒளிவு மறைவற்றவர் உங்கள் எண்ணத்தில் மிகவும் உறுதியானவர் கோபக்காரர் கலையிலும் இசையிலும் நீங்கள் மிகவும் நாட்டம் கொண்டவர் விருப்பம் கொண்டவர் உங்கள் திறமையில், உங்களுக்கு மிகப் பெருமளவு நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு ஒருசில குழந்தைகளே உள்ளன. நீங்கள், உங்கள் பெற்றோர்களை விரும்புகிறவர் நீங்கள் வெவ்வேறான போக்குகளில் விருப்பமுடையவர். அரசிலும் சமுதாயத்திலும், உங்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் இருக்கும். ஆராய்ச்சியில் ஆர்வமிக்க நீங்கள், உங்கள் எண்ணங்களில், அசையா உறுதிபடைத்தவர் முகஸ்துதிக்கு நீங்கள் இலக்காகிவிடக்கூடாது. காதல் ஈடுபாடு கொண்ட நீங்கள், உங்கள் காதலரை, மிகுந்த ஆற்றலுடன் மகிழ்விக்கிறீர்கள். லட்சியக் காதலரான நீங்கள், காதல் வேகத்தில் ஈர்க்கப்படலாம். மிகுந்த உணர்ச்சி வெறியும், சிற்றின்ப நாட்டமும் கொண்ட நீங்கள், வாழ்க்கையில் பல சுகபோகங்களையும் அனுபவிப்பவர். உங்கள் இல்லம், மிகவும் கவர்ச்சியானதாக இருக்கும் நீங்கள் மிகவும் பணக்காரராய், செல்வந்த வாழ்க்கையன்றை நடத்துவீர்கள். உங்களுக்கு, ராஜகுடும்பத்தைச் சேர்ந்த நண்பர்களும் இருப்பார்கள். குடும்பத்திலும் சமுதாயத்திலும், உங்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்மிக உயரிய அளவில் அரசுசலுகைகளையும் ஆதரவுகளையும் நீங்கள் பெறுவீர்கள்.

கன்னி

 நீங்கள் கன்னியா லக்னத்தில் பிறந்தவர். ராசிமண்டலத்தில் ஆறாவது இடத்தில் இருப்பது கன்யாராசி. உங்களுக்கு உருண்டையான முகமும், நன்கு வடித்தெடுத்தாற்போன்ற உடற்கட்டும் அமைந்திருக்கும். சிவந்த மேனியும், கறுமையான கண்களும் கேசமும் கொண்டிருக்கும் நீங்கள், மிகவும் சுறுசுறுப்பானவர் லட்சியப் பேரவா கொண்டவர். படிப்பதிலும், பலவற்றைக் கற்பதிலும், உங்களுக்கு மிகுந்த விருப்பம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல தகுதியும் திறமையும், உங்களுக்கு இருக்கும். நீங்கள் மென்மையாகப் பேசுபவர் அதிகம் பேசாதவர். கவர்ச்சியான கண்களைக் கொண்டவர். உங்கள் மனைவி/கணவனிடம், நீங்கள் மிகுந்த ஆசையும் ஈடுபாடும் கொண்டவர். உங்கள் சகோதரர்களிடமிருந்து, உங்களுக்கு சில எதிர்ப்புக்கள் வரலாம். கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் நீங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர். உங்களுக்கு பல புதல்விகள் இருப்பார்கள். சமயப் பணிகளில் நீங்கள் ஆர்வம் கொண்டிருப்பீர்கள் பல அயல் நாடுகளுக்கும் சென்று வருவீர்கள். மன உறுதியும் ஆழ்ந்த உள்ளத்து உணர்வுகளும் உங்களுக்கு உண்டு. உங்கள் குழந்தைப் பருவத்தில், நீங்கள் மிக மகிழ்ச்சியானவராக இருந்திருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில், பல தொல்லைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். 32 - லிருந்து 36 - வயது வரையான காலத்தில், நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதுடன், நல்ல பெயரும் புகழும், மதிப்பும் பெற்று விளங்குவீர்கள். சில நேரங்களில், உங்களுடைய விவரமான விளக்கங்கள் காரணமாய் நீங்கள் மற்றவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திடலாம். உங்கள் செயல்களில், நீங்கள் சுறுசுறுப்புடனும் விரைவாகவும் இயங்குவீர்கள். படித்து அறிவைப் பெருக்கிக் கொள்வதில், உங்களுக்கு மிகுந்த விருப்பம் இருக்கிறது. உங்கள் மனதில் இருப்பதையெல்லாம், நீங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்துவதில்லை மனம் திறந்து பேசுவதுமில்லை

துலாம்

 நீங்கள் துலா லக்னத்தில் பிறந்தவர். ராசி மண்டலத்தில் 7 - வது ஸ்தானத்தில்
இருப்பது துலாம் அதன் அதிபதி சுக்ரன். உங்களுக்கு, எடுப்பான, கவர்ச்சியான தோற்றமிருக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். சமய முக்யத்துவம் வாய்ந்த இடங்களுக்கு பயணம் செய்வது, உங்களுக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு, பெரிய - பிரதானமாகத் தெரியும் முக்கு இருக்கும். நீங்கள், நல்ல, தகுதிவாய்ந்த ஒரு வர்த்தகர் ஜோசியத்தில் விருப்பமுடையவர். உங்கள் குரல் இனிமையானது கவர்ச்சியானது நீங்கள் பேராசை பிடித்தவர் அல்ல. நீங்கள் பல இடங்களுக்கும் பயணம் செல்வீர்கள். உங்கள் குடும்பத்திலிருந்து விலகி, வெகு தொலைவில்போய் நீங்கள் வசிப்பீர்கள். உங்கள் குழந்தைப் பருவத்தில், உங்களுக்கு சில கஷ்டங்களும், வேதனைகளும் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் நீங்கள் மிகுந்த சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களுக்கு, வழக்கமான, மாமுலான ஒரு வாழ்க்கை அமையும். 31, 32 வயதுக்குப் பின்னர், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். உங்களுக்குப் பல நண்பர்கள் இருப்பார்கள். நீங்கள் கண்யமான தோற்றமுடையவர். உங்களுக்கு முணூக்கென்றால் இருமல் வந்துவிடும் நல்ல கவர்ச்சியான தோற்றமுடைய நீங்கள், விவேகம் நிறைந்த புத்திசாலி எப்போதும் புன்சிரிப்புடன் காணப்படுகிறீர்கள். கவர்ச்சியான கண்களைக் கொண்ட நீங்கள், கடமை தவறாதவர் சாமர்த்தியசாலி மற்றவர்களின் எண்ணத்தை உங்களால் எடைபோட்டிட முடியும் எதனையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்வதில் நீங்கள் பெயர் பெற்றவர். நீங்கள், ஒரு நல்ல தகுதிவாய்ந்த நிர்வாகி. அமைதியை விரும்பும் நீங்கள் கலையிலும் இசையிலும் மிகுந்த ஆர்வமும், ஆசையும் கொண்டவர். பெரிய தொழில் முயற்சிகளில், நீங்கள் வெற்றியடைவீர்கள். சிற்றின்பங்களிலும் டாம்பீகமான சொகுசுப் பொருட்கள் மற்றும் வாசனை செண்டுகளிலும், உங்களுக்கு கொள்ளை ஆசை. நீங்கள் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவரானாலும் வாழ்க்கையில், நன்கு முன்னேறுவீர்கள். அரசாங்கம் மற்றும் சமுக விவகாரங்களில் நீங்கள், மகத்தான வெற்றி காண்பீர்கள். சில தொழில் திட்டங்களுக்குத் தலைமை தாங்குவீர்கள். அகலமான முகத்தையுடைய நீங்கள், நல்ல அழகிய, கவர்ச்சியான, வசீகரத் தோற்றமுடையவர். லட்சியப் பேரவா கொண்டவரான நீங்கள், பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர். பல நாடுகளுக்கு, நீங்கள் பயணம் செல்வீர்கள். நீங்கள், உண்மை விரும்பி சமுகப் பணியில் ஆர்வம் கொண்டவர்.

விருச்சிகம் 

நீங்கள், விருச்சிக லக்னத்தில் பிறந்தவர். ராசி மண்டலத்தில் விருச்சிகம்ஏழாவது ஸ்தானத்தில் இருக்கிறது. உங்களுக்கு ஆரோக்கியமான உடலமைப்பும், அகலமான மார்பும், தீர்க்கமான கண்களும் உள்ளன. நீங்கள் மிகப் பெருமளவிற்கு புத்திசாலி சாமர்த்தியசாலி உங்கள் சகோதரர்களிடமிருந்து உங்களுக்கு எதிர்ப்பு வரலாம். நீங்கள் கருணை உணர்வற்ற கல்நெஞ்சக்காரர். உங்கள் காரியம் ஆகவேண்டும் என்று ஏற்பட்டால், உண்மையைக்கூட நீங்கள் பேசமாட்டீர்கள். மற்றவர்களின் எண்ணத்தை, உங்களால் மதிப்பிட முடிகிறது. ஜோசியத்தில் உங்களுக்கு ஈடுபாடு உண்டு. உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில், சில துன்பங்களை நீங்கள் அனுபவித்திருக்கலாம் ஆனால், வாழ்க்கையின் பிற்பகுதியில், பெருமளவு மகிழ்ச்சியை நீங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுக்கு நீண்ட ஆயுட்பலம் இருக்கும். நீங்கள், மற்றவர்களுடன் அதிகம் பேசிப் பழகாதவர் கோபக்காரர். மிகவும் லட்சியப் பேரவா கொண்ட நீங்கள், வாழ்க்கையில் சுபிட்சத்தைப் பெறுவதற்காக, பல வழிகளைப் பயன்படுத்துவீர்கள். நீங்கள் சந்தேக புத்தி கொண்டவர் முர்க்கத்தனமானவர் எதிலும் அதிகாரத்துவம் செலுத்துபவர். பிரதிகூலமான சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும், முன்னுக்கு வரக்கூடியவர். நீங்கள் எப்போதுமே சுறுசுறுப்பானவர் சோம்பேறித்தனமாக, வேலையே செய்யாமல் சும்மா இருப்பது உங்களுக்கு பிடிக்காது. உங்கள் குறிக்கோள் எட்டப்படும்வரை நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். உங்களுக்கு நல்ல கற்பனை ஆற்றல் உண்டு. நீங்கள் எதையும் உறுதியாக அடித்துச் சொல்பவர் வெற்றிக் கொள்ளத்தக்கவர் உங்களுக்கு மனக் கவலைகளும் பதட்டமும் இருக்கலாம். முளை நோயினால் நீங்கள் பாதிக்கப்படலாம். வீக்கம், காயங்கள், தீப்புண்கள், உயரத்திலிருந்து கீழே விழுந்துவிடுவது அல்லது விபத்துக்கள் போன்றவை, உங்களுக்கு நேரிடலாம். நீங்கள் அழகை ரசிப்பவர் சிற்றின்பப்பிரியர் நீங்கள் நடைமுறை ரீதியில் செயல்படுபவர் எதுவுமே நிரூபிக்கப்படாதவரை நீங்கள் அதனை நம்புவதில்லை. நீங்கள் பரந்த மனப்பான்மை உடையவர். எல்லா வகையான கருத்துக்களையும், யோசனைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்பவர் ஆனால் குடும்பப் பழக்க வழக்கங்களுக்கு மதிப்புக் கொடுப்பவர். நீங்கள் எப்போதுமே, உங்கள் காரியங்களை, கடைசி நிமிடம் வரை ஒத்திப் போடக்கூடியவர். உங்களுடைய கடுமையான உழைப்பாலும், அறிவாற்றல் திறனாலும், உங்கள் தொழில் முயற்சிகளில், நீங்கள் முன்னேறுகிறீர்கள். உங்களுக்கு, எளிதில் கோபம் வந்துவிடுகிறது. நீங்கள் திறமை வாய்ந்த ஒரு விளையாட்டு வீரர்.

தனுசு 

நீங்கள் தனுர் லக்னத்தில் பிறந்தவர். ராசி அமண்டலத்தில் அது 9 - வது ஸ்தானத்தில் உள்ளது அதன் அதிபதி குரு. நீங்கள் ஒரு நல்ல குணவான் உங்களுக்கு அழகிய பல்வரிசை உள்ளது நீங்கள் மிகவும் செல்வச்செழிப்பு படைத்தவர் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். நீங்கள் நன்கு படித்தவர் அறிவாளி விவேகமிக்கவர். நீங்கள், உங்கள் தொழிலில் பலராலும், விரும்பி நேசிக்கப்படுகிறீர்கள். நீங்கள் அயல் நாடுகளுக்குப் பயணம் செல்வீர்கள். நீங்கள் படித்தவர்களையும், பெரியோர்களையும், மதித்து மரியாதை செலுத்துவீர்கள். சுறுசுறுப்பான உங்களுக்கு ஒருசில குழந்தைகளே இருக்கும். உங்கள் குழந்தைப் பருவத்தில், நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவித்திருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையின் பின் பகுதியில், நீங்கள் செல்வச் செழிப்பையும், நன் மதிப்பையும் சிறப்பையும் பெறுவீர்கள். 22 வயதுக்குப் பின்னர், நீங்கள் நன்கு முன்னேறுவீர்கள். நீங்கள் நீண்ட முகத்துடன், மிகுந்த அழகிய தோற்றத்துடன் விளங்குவீர்கள். உங்கள் முன்தலை, பிரதானமாகத் தெரியும். உங்களுக்கு பளிச்சென்று ஒளிவிடும் கண்கள் உள்ளன. நீங்கள் தாராள சிந்தை கொண்டவர். நீங்கள் மிக சுறுசுறுப்பானவர் துணிச்சல்மிக்கவர். விளையாட்டுப்போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை, நீங்கள் விரும்புகிறீர்கள். புகழும் சிறப்பும் அடைவதற்கு நீங்கள், எப்போதுமே பேராவல் கொண்டவர். நீங்கள், அதிகம் உயரமாக இருக்கமாட்டீர்கள் நல்ல கவர்ச்சியான குரல் வளம் கொண்டிருப்பீர்கள். உங்கள் சுய நலனுக்கு, நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் தருபவர். நீங்கள் சமய ஈடுபாடு உடையவர் பொது ஸ்தாபனங்களுக்கு நீங்கள் தலைவராக இருக்கலாம். வேதாந்தத்திலும், மதம் சம்பந்தப்பட்ட புத்தகங்களிலும், உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது. கவர்ச்சியான தோற்றமுடைய நீங்கள், எப்போதுமே சிரித்த முகத்துடன், பகட்டு எதுவுமின்றி இருப்பவர் உண்மையை விரும்புபவர் இளகிய, கனிவுமனம் படைத்தவர். மிகவும் சுயேச்சையான கருத்துக்களைக் கொண்டவர். எந்த ஒரு விஷயத்தையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுப்பதில் நீங்கள் மிகவும் திறமைசாலி பல விஷயங்களைப் பற்றி படித்துத் தெரிந்து கொள்ளவல்ல நீங்கள், கடவுளிடம் பக்தியுடையவர் நன்கு உழைக்கக்கூடிய நீங்கள், சோம்பேறியாக, எந்த வேலையுமே செய்யாமல் சும்மா இருத்தலை விரும்புவதில்லை.

மகரம்

நீங்கள் மகர லக்னத்தில் பிறந்தவர். ராசி மண்டலத்தில் உள்ள பத்தாவது ராசி அதுஉங்களுக்கு பயணம் செய்வதில் நல்ல ஆசை இருக்கும் கவர்ச்சியான கண்களை உடைய நீங்கள், மிகவும் தந்திரமானவர் சாமர்த்தியசாலி புத்திசாலி. சில நேரங்களில், கொஞ்சம் சோம்பேறியும்கூட. நீங்கள் பணத்தை அதிகமாக செலவு செய்கிறீர்கள் மதத்தில், நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை கவிதையை ரசிக்கிறீர்கள். சாதாரணமாகவே, உங்கள் குழந்தைப் பருவம் இருந்திருந்தாலும், 32 வயதுக்குப் பின்னர், நீங்கள் பெருமளவிற்கு சுகபோகங்களைப் பெறுவீர்கள். நீங்கள் மிகவும் மெலிந்த உடல் அமைப்பு கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு ஏராளமாய் பணம் இருந்தும், செல்வம் நிலையாய் இருக்காது உயரமாகவும் சிவந்த மேனியுடனும், நீங்கள் தோற்றம் கொண்டிருப்பீர்கள். உங்கள் திட்டங்களிலும் முயற்சிகளிலும் மிகவும் கவனமுடைய நீங்கள், உங்கள் அறிவாற்றல் முலம் வெற்றி காண்பீர்கள். ஓயாமல் பேசும் நீங்கள், கலைகளில் ஆர்வமிக்கவர் கலைசார்ந்த வழிகளில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். நீங்கள், உங்களைப்பற்றியே நினைப்பவர் உங்களுக்கு மிகவும் அடர்த்தியான கேசம் இருக்கும். பணத்தை, வீணாகச் செலவிட்டு விரயம் செய்வீர்கள். குழந்தைப் பருவத்தில், நீங்கள் மிகவும் பலவீனமாகவும் ஒல்லியாகவும் இருந்திருக்கலாம். பிறகு, போகப்போக, 14 முதல் 19 வயது வரையான காலத்தில், நல்ல உயரமாக வளர்ந்துவிடுவீர்கள். உங்களுக்கு மெலிந்த உருண்டையான முகம் இருக்கும். உங்கள் கால் முட்டில் ஒரு தழும்போ, மச்சமோ இருக்கலாம். நீங்கள் அனுபவ ரீதியில் செயல்படுபவர் அரசியலில் வெற்றி காண்பீர்கள். நீங்கள் இடர்ப்பாடுகளைக்கண்டு அஞ்சுவதில்லை உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் ஒரு ஆழ்ந்த சிந்தனையாளர் பல இயல்களைக் கற்றறிந்தவர். நீங்கள் உங்கள் திட்டங்களை, மிக விரைவாக ஏற்பாட்டுடன் நடத்தி, நிறைவேற்றக் கூடியவர். உங்களுக்கு நல்ல நினைவாற்றல் உள்ளது. நீங்கள் நன்கு படித்தவர் மரியாதைக்குரியவர்

கும்பம்

 சனியை அதிபதியாகக் கொண்ட கும்ப லக்னத்தில், நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் கும்பம்ராசி மண்டலத்தில் 11 வது ராசி. உங்களுக்கு தடித்த கழுத்து இருக்கும். சுயமரியாதைக்கு நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் தருபவர். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து, உங்களுக்கு எதிர்ப்பு இருக்கும். உங்கள் தலை வழுக்கையாக இருக்கலாம் அல்லது கேசம், மிகவும் குறைவாக இருக்கலாம். உங்கள் குழந்தைப் பருவத்தில் உங்களுக்கு, சில துரதிருஷ்டங்களும் துன்பங்களும் இருந்திருக்கலாம். ஆனால், உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில், நீங்கள் மகிழ்ச்சி காண்பீர்கள். அந்த சமயத்தில் உங்களுக்கு செல்வச் செழிப்பும், சொத்துக்கள் வசதியும் கிடைக்கும். உங்கள் சகோதரர்களின் கெட்ட சகவாசம் உங்களை பாதிக்கும். 24, 25 வயதில், நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள். நீங்கள் ஒரு தத்துவஞானி எந்த ஒரு விஷயத்தையும், துருவிப்பார்த்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர். நீங்கள் அமைதி விரும்புபவர் நன்கு படித்தவர். நீங்கள் பல விஷயங்களைப் பற்றியும், சதா சிந்தித்துக்கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிட விரும்புகிறீர்கள். கூரிய நினைவாற்றல் கொண்ட நீங்கள், உங்கள் எண்ணங்களில் விரைவாகச் செயல்படுகிறீர்கள். நீங்கள் ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர் வாழ்க்கையில் பல ஏற்றதாழ்வுகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். உயரமாக இருக்கும் நீங்கள், நல்ல கவர்ச்சியான, கம்பீரமான தோற்றமுடையவர். உங்களுக்கு பல கஷ்டங்கள் இருந்தாலும், நீங்கள் அச்சமின்றி செயல்படுபவர். நீங்கள் சமயோசிதமாக செயல்படக் கூடியவர் அரசியலில் ஆர்வம் கொள்வீர்கள். பொது நிறுவனங்களிலும், நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். விளையாட்டுத் துறையில், உங்களுக்கு விருப்பம் இருக்கும். வலுவான உடற்கட்டையுடைய நீங்கள், மிகவும் தாராள சிந்தை கொண்டவர். நீங்கள், நிலபுலன்களுக்கு சொந்தமாக இருப்பதுடன், மிகுந்த கவனமாகவும் பணத்தை செலவு செய்வீர்கள். உங்கள் எண்ணங்களிலும் செயல்களிலும், நீங்கள் மிகுந்த உறுதியுடன் இருப்பவர். நீங்கள், பலதரப்பட்ட விருந்துகளுக்கும், கிளப்புகளுக்கும் போய்வர விரும்புகிறீர்கள் அதன் விளைவாய் உங்களுக்கு அவப் பெயரும் ஏற்படும். உங்கள் உணர்ச்சிகளையோ, காதலையோ நீங்கள் வெளிப்படையாக, எடுத்துக்காட்டுவதில்லை. நீங்கள் மிகவும் தந்திரம்மிக்க சாமர்த்தியசாலி. நன்கு படித்த, புத்திசாலியான ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்ளவே நீங்கள் விரும்புகிறீர்கள்.

மீனம்

நீங்கள் மீன லக்னத்தில் பிறந்தவர் ராசி மண்டலத்தில் 12 வது வீட்டிலுள்ள மீனத்தின் அதிபதி குரு. உங்களுக்கு, பெரிய, கவர்ச்சியான கண்கள் இருக்கும். உங்களுக்கு மிகவும் கவர்ச்சியான தனித் தோற்றமும் இருக்கும். நீங்கள் மிகவும் அன்பும் கனிவும் கொண்டவர். உங்கள் மனைவியிடம், மிகுந்த ஈடுபாடு கொண்டவர் காதல் கொண்டவர். உங்கள் தலை, பெரியதாக இருக்கும். குழந்தைகளிடமிருந்து, நீங்கள் மனமகிழ்ச்சி பெறுவீர்கள். சில நேரங்களில், நீங்கள் ஆரோக்கியம் குன்றியவராய் உணருகிறீர்கள். நீங்கள், சிற்றின்பங்களில் பிரியம் கொண்டவர் காம உணர்ச்சி உடையவர். உடல் இன்பங்களை விரும்புபவர். உங்களுக்கு, திடீரென்று சில பாதிப்புக்கள் (அல்லது தோல்விகள்) ஏற்படலாம். உங்கள் குழந்தைப் பருவத்தில், உங்களுக்கு சாதாரணமான வெற்றிகளே கிடைத்திருக்கலாம் உங்கள் வாழ்க்கையின் நடுவயதுக் காலத்தில், சில இடர்ப்பாடுகள் தோன்றலாம் ஆனால் பிற்பகுதியில், பெருமளவிற்கு சந்தோஷங்கள் கிடைக்கும். 21 வயதுக்குப் பின்னர், நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள். நல்ல சதைப்பற்று மிக்க கொழுப்பான கன்னங்களும், சாம்பல் வெளுப்பு நிறமும் கொண்ட நீங்கள், எப்போதும் தூங்கிவழியும், மந்தமான கண்களை உடையவர். உங்களுக்கு நீண்ட ஆயுட்பலம் இருக்கும். நீங்கள் பெருமளவிற்கு தண்ணீர் அருந்துவீர்கள். தண்ணீரில் முழ்கிப் போய்விடக்கூடிய விபத்துக்கள் குறித்து, நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நீங்கள் கடவுளிடம் பக்தியுடையவர் விருந்தோம்பல் இயல்புடையவர். குடும்பப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் நீங்கள், விறுவிறுவென்று, தங்குதடையின்றி பேசும் திறன்படைத்தவர். நீங்கள் படித்த விவேகியாக இருப்பவர். அதிகம் உயரமாக இருக்கமாட்டீர்கள். நல்ல அழகிய தோற்றமுடைய உங்களுக்கு, எடுப்பான முக்கும், அழகிய பல்வரிசையும், சுருட்டை மயிரும் இருக்கும். குடும்பத்தில் நீங்கள் மகிழ்ச்சி காண்பீர்கள். பணம் சம்பாதிப்பதில், உங்களுக்கு சில சிரமங்கள் இருக்கலாம். நீங்கள் நிறைய பணம் சம்பாதித்தாலும் பெருமளவிற்கு செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். நீங்கள் சமய ஈடுபாடு உடையவர் உங்கள் எதிரிகளுக்குக்கூட உதவி செய்யக் கூடியவர். நீங்களும் உங்கள் மனைவியும், விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டவர்கள். நீங்கள், கவிதையிலும் இலக்கியத்திலும்கூட, மிகுந்த விருப்பமுடையவர்

நன்றி: தமிழ் களஞ்சியம் 


மேலும் சில பதிவுகள்
உங்கள் பிறந்த எண்ணுக்குரிய அதிஷ்ட நிறம் என்ன
உங்கள் பிறந்த திகதிக்குரிய பலன்கள்
நட்சத்திரப்படி உங்கள் இஷ்ட தெய்வம் யார்